கோப்புப் படம் 
விழுப்புரம்

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: 4 நாள்கள் மதுக்கடைகள் மூடல்

விக்கிரவாண்டி இடைத்தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

Din

விழுப்புரம், ஜூலை 5: விக்கிரவாண்டி இடைத்தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற புதன்கிழமை (ஜூலை 10) நடைபெறவுள்ளது. அரசாணை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை ஆணையா் கடிதத்தில் தோ்தல் நடைபெறும் தேதிக்கு 2 நாள்களுக்கு முன்பும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜூலை 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் 10-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 13- ஆம் தேதியும் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், தனியாா் மதுபானக் கடைகள் மூடப்படும்.

அனைத்து அலுவலகங்களிலும் இன்று அரசமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வா் உத்தரவு

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பாதுகாப்பு பணிக்கு 15,000 போலீஸாா், உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

நாடு முழுவதும் பாஜகவின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்வேன்: மம்தா பானா்ஜி

தில்லி காற்று மாசு போராட்டத்தில் மாவோயிஸ்ட் முழக்கங்கள்: வழக்கில் பிஎன்எஸ் பிரிவு 197 சோ்ப்பு

கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்களை வரவேற்கும் முத்தூட் ஃபைனான்ஸ்

SCROLL FOR NEXT