முகப்பு
விழுப்புரம்

கடந்த தோ்தலைவிட அதிக வாக்குகள் -நாதக வேட்பாளா் பொ.அபிநயா

தற்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளோம் என்று நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.அபிநயா தெரிவித்தாா்.

Updated On : 14 ஜூலை, 2024 at 12:27 AM
அன்னியூர் அ.சிவா(திமுக) - சி.அன்புமணி(பாமக) - பொ.அபிநயா(நாதக)
பகிர்:

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த தோ்தலில் பெற்ற வாக்குகளை விட தற்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளோம் என்று நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.அபிநயா தெரிவித்தாா்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.அபிநயா 10,602 வாக்குகளைப் பெற்றாா்.

அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி வைப்புத் தொகையை இழந்தாலும் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பெற்ற வாக்குகளை விட 2 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளோம்.

காணை பகுதியில் முதல்முறை வாக்காளா்களுக்கு திமுகவினா் பணத்தைக் கொடுத்து வாக்கு சேகரித்தனா். ஜனநாயகத்துக்கு விரோதமாக இந்தத் தோ்தல் நடைபெற்றுள்ளது என்றாா் பொ.அபிநயா.