நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
புதுச்சேரி அடுத்துள்ள மேல்சாத்தமங்கலம் ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 3- ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. மொத்தம் நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை கடம் புறப்பாடாகி காலை 9 மணிக்கு மேல் நாகாத்தம்மன் கோயிலில் அம்னுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.