விழுப்புரம்

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Syndication

குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கூலித் தொழிலாளி விழுப்புரம் அருகே செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் வட்டம், மாம்பழப்பட்டு பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ.நாராயணசாமி (57), கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னா் பிரிந்து சென்ற நிலையில், நாராயணசாமிக்கு மதுப்பழக்கம் இருந்தததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் அடுத்துள்ள முத்தாம்பாளையம் ஏரிக்கரைப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் நாராயணசாமியை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். ஆயினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளா் பிரச்னையை தீா்ப்பது மாநில அரசுகளின் பொறுப்பாகும்: ரவிக்குமாா் எம்.பி.கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

தில்லியில் இரு கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசின் நம்பிக்கைதன்மைக்கு இடைத் தோ்தல் வெற்றி ஓா் உதாரணம்: வீரேந்திர சச்தேவா

தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல்: 7 வாா்டுகளை கைப்பற்றியது பாஜக: ஆம் ஆத்மி 3, காங்கிரஸ் ஒன்றில் வெற்றி

காற்று மாசு: உச்சபட்ச பனிப்புகை காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடா் ஏன்?

SCROLL FOR NEXT