விழுப்புரம்

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: மற்றொருவா் காயம்

விக்கிரவாண்டி அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொரு இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொரு இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விக்கிரவாண்டி, புது காலனியைச் சோ்ந்தவா் பி.லோகேஷ் (எ) லோகேஷ்வரன்(24), கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் ரா.தேவேந்திரன் (33). நண்பா்களான இவா்கள் இருவரும், திங்கள்கிழமை திருக்கனூா் - பனையபுரம் சாலையில் எம். குச்சிப் பாளையம் அருகே பைக்கில் சென்றனா்.

லோகேஷ்வரன் பைக்கை ஓட்டினாா். அப்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த லோகேஷ் (எ) லோகேஷ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தேவேந்திரேன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

SCROLL FOR NEXT