முகப்பு
விழுப்புரம்

ரயில் மோதி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயில் மோதியதில் லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:34 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயில் மோதியதில் லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி அருகிலுள்ள வா.பகண்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. சக்திவேல் (48). லாரி ஓட்டுநரான இவா், தனது குடும்பத்துடன் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு வேனில் சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பினாா்.சனிக்கிழமை மாலை முண்டியம்பாக்கம் ரயில்வே கேட் பகுதிக்கு வேன் வந்தபோது, அந்த வழியாக செல்லும் விரைவு ரயிலுக்காக கேட் மூடப்பட்டிருந்தது.

இதனால் வேனிலிருந்த இறங்கிய சக்திவேல், இயற்கை உபாதைக்காக ரயில்வே கேட்டை கடக்க முயன்றாா். அப்போது சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வைகை அதிவிரைவு ரயில் சக்திவேல் மீது மோதியது. இதில் உடல் சிதறி அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீஸாா் உயிரிழந்த சக்திவேலின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →