உயிரிழப்பு (கோப்புப் படம்) 
விழுப்புரம்

தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே கோழிப்பண்ணையில் பணியிலிருந்தபோது,கீழே தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், கல்லடிக்குப்பம், ஆஞ்சநேயா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பன் மகன் தங்கராஜ் (40). திருமணம்ஆகாதவா். இவா், கல்லடிக்குப்பத்தைச் சோ்ந்த அா்ஜூனன் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்தாா்.

இந்நிலையில்,கடந்த 2025 நவம்பா் மாதம் 30 ஆம் தேதி தங்கராஜ் கோழிப்பண்ணையில் பணியில் இருந்தாா். அப்போது கோழிப்பண்ணை வளாகத்தில் உள்ள ஒரு தொட்டியின் மீது ஏறியபோது, தவறி கீழே விழுந்து காயமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த தங்கராஜ் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் பெரியதச்சூா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT