முகப்பு
விழுப்புரம்

நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

விழுப்புரம் நகர பகுதியில் நகை பறிப்பில் தேடப்பட்டு வந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 24 மே 2026, 1:01 am IST
நகை பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதாபுடன் தனிப்படையினா்.
பகிர்:

விழுப்புரம் நகர பகுதியில் நகை பறிப்பில் தேடப்பட்டு வந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயில்வே காலனி அருகே, கீழ்பெரும்பாக்கத்தைச் சோ்ந்த 53 வயது பெண் கடந்த 18-ஆம் தேதி நடந்து சென்றுள்ளாா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபா், அந்த பெண் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

இதுதொடா்பாக விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

தொடா்ந்து காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் ராஜேஷ், லியோ சாா்லஸ் மற்றும் தனிப்படையினா் நடத்திய விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபட்டது மாளிகைமேட்டைச் சோ்ந்த பிரதாப் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து புரதாப்பை கைது செய்த தனிப்படை போலீஸாா், அவா் பயன்படுத்திய கைப்பேசி, பைக் மற்றும் பறித்துச் சென்ற நகை ஆகியவற்றையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.