சிதம்பரத்தில் ஆக.27-31ல் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா!
சிதம்பரம் பெரியார் தெரு ஸ்ரீமத் ராமானுஜர் பஜனை மடத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி 97-வது ஆண்டு இசை விழா ஆக.27-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சிதம்பரம் பெரியார் தெரு ஸ்ரீமத் ராமானுஜர் பஜனை மடத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி 97-வது ஆண்டு இசை விழா ஆக.27-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆக.27 செவ்வாய்க்கிழமை: மங்கலஇசை, கிருஷ்ணவிஜயம் நிகழ்ச்சி, சிவகாமி மகளிர் பஜனை மன்றத்தினரின் கோலாட்டம், ஸ்ரீநந்தி மிருதங்க வித்தியாலயா மாணவ, மாணவியர்களின் தாளவாத்தியம், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம்; ஆக.28 புதன்கிழமை: கோவை செல்வி என்.பத்மபிரியா அபங்கம் பஜன் நிகழ்ச்சி, ஆயிரம் வைசிய மஞ்சபுத்தூர் சிவகாமி மகளிர் பஜனை மன்றத்தினரின் இசைநிகழ்ச்சி, பத்மஸ்ரீ நாட்டியாலயா பள்ளி நிறுவனர் தஞ்சை ஏ.வடிவுதேவி குழுவினரின் பரதநாட்டியம்; ஆக.29 வியாழக்கிழமை: செல்வி பி.வி.ஹர்ஷினி பாட்டு, முனைவர் ஆர்.எழில்ராமன் குழுவினரின் இன்னிசை, சிதம்பரம் சித்ரா ஆர்ட் மற்றும் கல்சுரல் அகாதெமி மாணவ, மாணவியர்களின் பரதநாட்டியம்; ஆக.30 வெள்ளிக்கிழமை: ஸ்ரீகான கலாமாமணி குன்னக்குடி எஸ்.லெங்கடரத்தினம் குழுவினரின் பாட்டு நிகழ்ச்சி, ஸ்ரீராஜகணபதி மிருதங்க வித்தியாலயா மாணவர்களின் இன்னிசை நிகழ்ச்சி, பி.எம்.பாண்டமங்கலம் கிருஷ்ணகுமார் குழுவினரின் நாதசங்கமம் நிகழ்ச்சி; ஆக.31 சனிக்கிழமை: விடையாற்றி உற்சவம், குன்னக்குடி எஸ்.வெங்கடரத்தினம் குழுவினரின் பாட்டு மற்றும் இசைகலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள். விழா ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாக்குழுத் தலைவர் குன்னக்குடி எஸ்.வெங்கடரத்தினம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.