கடலூர்

மாட்டு வண்டி மீது பேருந்து மோதல்: 18 பேர் காயம்

DIN

விருத்தாசலம் அருகே மாட்டு வண்டி மீது பேருந்து மோதியதில் 18 பேர் சனிக்கிழமை காயமடைந்தனர்.
பொள்ளாச்சியிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து சனிக்கிழமை அதிகாலையில் விருத்தாசலம் புறவழிச் சாலை வழியாகச் சென்றது. அப்போது சாலையில் திடீரென மாட்டுவண்டி குறுக்கிட்டது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மாட்டு வண்டி மீது மோதி கவிழ்ந்தது. இதில் பேருந்திலிருந்த பயணிகள் 17 பேரும், மாட்டு வண்டியை ஓட்டிவந்த கலியபெருமாள் (65) என்பவரும் பலத்த காயமடைந்தனர். விபத்தில் மாடுகளும் காயமடைந்தன.
காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயம்பட்ட மாடுகள் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. விபத்து தொடர்பாக விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT