கடலூர்

அம்பேத்கர் நினைவு நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை

தினமணி

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 கடலூர் தலைமைத் தபால் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக சார்பில் நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் வ.கந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர அவைத் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்
 பி.அருணாச்சலம், மாவட்டப் பிரதிநிதி ஆர்.வி.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் செல்வி வேல்முருகன், கே.தமிழ்ச்செல்வம், ராஜேந்திரன், ஜெ.அன்பு, பழனிச்சாமி, ஜீவாமுருகன், அ.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 திமுக சார்பில் நகரத் தலைவர் கே.எஸ்.ராஜா தலைமையில் தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு, நிர்வாகி அகஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
 மாவட்ட செய்தித் தொடர்பாளர் பால.புதியவன், மாநில நிர்வாகிகள் பெ.பாவாணன், சொக்கு, த.ஸ்ரீதர், மொ.வீ.சக்திவேல், பா.ரா.முரளி, செந்தில், நகர ஒருங்கிணைப்பாளர் கிட்டு, நகரச் செயலர் ராஜதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன் தலைமையில் நிர்வாகிகள் பலர் ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
 காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார். நகரத் தலைவர் என்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்ட துணைத் தலைவர் வி.சிவராஜ் தலைமையில் மாவட்டத் தலைவர் பால.வீரவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல மாவட்டச் செயலர் கு.ஜெயமணி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
 தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அலுவலர் நலச் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் கு.பரமேஸ்வரன் தலைமையிலும், அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் சி.எஸ்.செங்கல்ராவ் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
 நெய்வேலி: நெய்வேலி நகரியத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, பாமக முன்னாள் மாவட்டச் செயலர் கோ.ஜெகன் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, நெய்வேலி கிழக்கு ஒன்றியச் செயலர் செல்வக்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணிச் செயலர் ரவிச்சந்திரன், முன்னாள் நகரத் தலைவர் சுப்பிரமணியன், குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெய்வேலி இந்திய பொதுக் காப்பீட்டுக் கழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில், மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், புதுச்சேரி மண்டலத் தலைவர் சந்திரசேகரன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
 முன்னதாக 19-ஆவது வட்டத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு முன்னாள் சங்கப் பொருளாளர் கிள்ளிவளவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
 வடலூர்: வடலூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலர் அ.கண்ணன் தலைமையில், பொருளாளர் சுரேஷ், ஒன்றியச் செயலர் சிவசக்தி, துணைச் செயலர் பார்த்திபன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
 கண்டரக்கோட்டை: அண்ணாகிராமம் மேற்கு ஒன்றிய மதிமுக சார்பில், கண்டரக்கோட்டை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஒன்றியச் செயலர் எஸ்.கே.வெங்கடேசன் மாலை அணிவித்தார்.
 மாவட்டப் பிரதிநிதி சிவக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலர் கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல, அண்ணாகிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கிழக்கு ஒன்றியச் செயலர் நாகை.ஜெய்சங்கர் தலைமையில், ஒன்றியப் பொருளாளர் எம்.முருகன், என்.சேகர் உள்ளிட்டோர் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT