சிதம்பரம் கீழரத வீதியில் கடையின் பின்புறக் கதவின் பூட்டை உடைத்து ரூ. 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சிதம்பரம் கீழரத வீதியில் தில்லைநாயகம் (41) என்பவர் குளிர்பானங்கள் ஏஜென்சி மற்றும் பார்சல் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல, சனிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
மறுநாள் காலை (ஞாயிற்றுக்கிழமை) கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பின்புறக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த ரூ. 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், சிதம்பரம் நகரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.