கடலூர்

நியாய விலைக் கடை முற்றுகை

தினமணி

காட்டுமன்னார்கோவில் அருகே நியாய விலைக் கடையில் முறையாகப் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து, பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளுமேடு கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடை கடந்த சில வாரங்களாக சரிவர திறக்கப்படவில்லையாம். பொதுமக்களுக்கு முறையாக பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதில்லையாம்.
 இதனைக் கண்டித்து கொள்ளுமேடு ஜமாஅத் ஒருங்கிணைப்புக் குழு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் பிரகாஷ் தலைமையில் பொதுமக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதில், நஸ்ருதீன், அப்துல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், நியாய விலைக் கடையை முறையாக நடத்த வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT