கடலூர்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மேற்கு மாவட்டம் சார்பில், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஜிஎஸ்டி வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை விளக்கும் வகையில் கருப்புத் தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சி.பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் எ.அருள்சத்தியதாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
 வட்டாரத் தலைவர் செ.சுப்பிரமணியன், செயலர் பி.அலெக்சாண்டர், நிர்வாகிகள் வீ.நாராயணன், கு.ராமச்சந்திரன், கே.அருணகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாவட்ட செயலர் தீ.தீனபந்து வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ஜி.முத்துசாரதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT