விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை
சிதம்பரம் மெய்காவல் தெருவில் உள்ள ஸ்ரீபொற்பாத விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சிதம்பரம் மெய்காவல் தெருவில் உள்ள ஸ்ரீபொற்பாத விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 14-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வீதிஉலா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உலக நன்மை வேண்டி திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 400 பெண் பக்தர்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.