சிவசுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம்
பண்ருட்டி அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி - தேவசேனா உடனாகிய சிவசுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி - தேவசேனா உடனாகிய சிவசுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை விநாயகர் வழிபாடு, மஹா கணபதி ஹோமம், பூர்வாங்க பூஜை மற்றும் புதிய சிலைகள் கரிகோலம் ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து, மாலை 6 மணி அளவில் வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள், ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகளுடன் ஹோமங்கள், தத்துவார்ச்சனை மற்றும் கலசம் கோயிலை வலம் வருதல் ஆகியவை நடைபெற்று, சுமார் 8.30 மணி அளவில் சிவாச்சாரியார் தி.சுப்ரமணிசிவம் கோபுர கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுமார் 7 மணி அளவில் சர்வ அலங்காரத்தில் சிவசுப்ரமணி சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சி.கலைமணி மற்றும் அம்பேத்கர் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.