கடலூர்

பள்ளி அறையில் வைத்திருந்த 69 பவுன் நகைகள் மாயம்

தினமணி

கடலூரில் பள்ளிக்கூட அறையில் வைக்கப்பட்டிருந்த 69 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
 கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் சி.முத்துக்குமார் (55). சிவலிங்கம் தெருவில் பள்ளி நடத்தி வருகிறார். பள்ளியில் அவருக்கான அறையில் சுவற்றில் மரத்திலான சிறிய அறை அமைத்துள்ளார். அதில், 69 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தாராம். சில நாள்களுக்கு முன்பு அந்த அறையை பார்த்தபோது அதிலிருந்த நகைகளைக் காணவில்லையாம்.
 இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 காணாமல் போன நகையின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT