நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
கடலூர் நகராட்சி ஆணையராக க.சரவணன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் பொறுப்பிலிருந்து பணி மாறுதல் பெற்று இங்கு பொறுப்பேற்றுள்ளார்.
கடலூர் நகராட்சி ஆணையராக க.சரவணன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் பொறுப்பிலிருந்து பணி மாறுதல் பெற்று இங்கு பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்பு கடலூர் நகராட்சி ஆணையராக இருந்த முஹிபுர் ரஹ்மான் மறைமலை நகர் நகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
கடலூர் நகராட்சியில் தற்போது தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ், பல்வேறு பணிகளும், அதே போல, வரி வசூல் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்கு பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கடலூர் நகராட்சி ஆணையர் க.சரவணன் கேட்டுக் கொண்டார்.