கடலூர் சார் -ஆட்சியராக கே.எம்.சரயு (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றார்.
புதுக்கோட்டை சார் -ஆட்சியராக பதவி வகித்து இவர், பணியிட மாறுதலில் இப்பொறுப்பை ஏற்றுள்ளார். கடந்த 2015 -ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வான இவர், விழுப்புரத்தில் பயிற்சி ஆட்சியராகவும், பின்னர் மத்திய அரசின் மத்திய நிதி அமைச்சகத்தில் உதவிச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.
கடலூர் சார்- ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஜானிடாம் வர்கீஸ் மீன்வளத் துறைக் கூடுதல் இயக்குநராக ராமநாதபுரத்துக்குப் பணியிட மாறுதலில் சென்றதால், கே.எம்.சரயு கடலூர் சார்-ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.
பின்னர், கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை அவரவர் பகுதிகளுக்கே சென்று விசாரித்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் தங்களது குறைகளை 94450 00426 என்ற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலமாகவும் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தார்.