கடலூர்

ஐடிஐ சேர்க்கை கலந்தாய்வு

தினமணி

கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் தொழில்பயிற்சி நிலையங்களுக்கான (ஐடிஐ) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஐடிஐ மூலமாக பல்வேறு தொழில்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 4 அரசு ஐடிஐ, 23 தனியார் ஐடிஐ நிலையங்கள்
 செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேரும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வை கலந்தாய்வு முறையில் அரசு நடத்தி வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்டத்திலுள்ள 27 ஐடிஐ-க்களுக்கான (பொறியியல் தொழில் பிரிவு) கலந்தாய்வு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு ஐடிஐ-யில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
 இதுகுறித்து கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலன் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2 ஆயிரம் இடங்களுக்கு 3,800 பேர் வரைவிண்ணப்பித்திருந்தனர். ஆன்-லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 400 பேர் வீதம் வரவழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதுவரை 514 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மற்ற இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 கலந்தாய்வு நிறைவு பெற்ற பின்னர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT