முகப்பு
கடலூர்

பிளஸ்1: கலைமகள் பள்ளி சிறப்பிடம்

காட்டுமன்னார்கோவிலில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளஸ்1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் சிறப்பிடம் பெற்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

காட்டுமன்னார்கோவிலில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளஸ்1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் சிறப்பிடம் பெற்றனர்.
500 மதிப்பெண்களுக்கு மேல் 2 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 43 மாணவர்களும் பெற்றனர். தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கலைமகள் கல்விக் குழும நிறுவனர் வீர.முத்துகுமரன், தாளாளர் மு.பரணிதரன் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். 
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் 
கலியபெருமாள், பள்ளி முதல்வர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →