கடலூர்

பேருந்து கண்ணாடி உடைப்பு

DIN

தனியார் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
குறிஞ்சிப்பாடி வட்டம், கல்குணம், வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜசேகர் மகன் புருஷோத்தமன் (32). தனியார் பேருந்து ஓட்டுநர். 
இவருக்கும், மற்றொரு தனியார் பேருந்து நடத்துநர்களான இருப்புக்குறிச்சி வெங்கடாஜலம், வளையமாதேவி கார்த்திகேயன் ஆகியோருக்கும் இடையே பேருந்து எடுக்கும் நேரம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம். 
புதன்கிழமை வழக்கம்போல புருஷோத்தமன் தனியார் பேருந்தை ஓட்டிச்சென்றார். இந்தப் பேருந்து விருத்தாசலம் - கடலூர் பிரதான சாலையில், பொன்னலெகரம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, மற்றொரு பேருந்தின் நடத்துநர்களான வெங்கடாசலம், கார்த்திகேயன் ஆகியோர் வழிமறித்து, புருஷோத்தமனை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், ஊ.மங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT