முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் 

சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
 இதனை முன்னிட்டு, மகாருத்ர யாகம், ருத்ர ஜபம் ஆகியவை நடைபெற்றன. ஸ்ரீ நடராஜர் கோயில் சித்சபையில் அமைந்துள்ள மூலவரான ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
 ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது, ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
 மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்புள்ள கனகசபையில் புதன்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டு களித்து சுவாமியை தரிசித்தனர்.
 மாலை 6.30 மணிக்கு தொடங்கிய மகாபிஷேகம் இரவு 11.00 மணிக்கு முடிவுற்றது. மகாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் மகாருத்ர யாகம் நடைபெற்றது. யாகசாலையில் கலசபூஜை, 121 தீட்சிதர்கள் பங்கேற்ற மகாருத்ர ஜபம், 12 தீட்சிதர்கள் பங்கேற்ற ருத்ர ஹோமம், மகா தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
 பின்னர், யாகாசலையிலிருந்து கலசங்கள் ஊர்வலமாக மேளதாளத்துடன் கொண்டு செல்லப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →