முகப்பு
கடலூர்

திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள்

திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் தொடர்பாக அந்தக் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் தொடர்பாக அந்தக் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மார்ச் 3-ஆம் தேதி கடலூர் வடக்கு ஒன்றியத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் சேலம் கோவிந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். இதேபோல 4-ஆம் தேதி பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் சேலம் கோவிந்தனும், 6-ஆம் தேதி புவனகிரி கிழக்கு ஒன்றியத்திலும், 7 -ஆம் தேதி கம்மாபுரம் வடக்கு ஒன்றியத்திலும் கொள்கை பரப்பு துணைச் செயலர் குடியாத்தம் குமரன், 8-ஆம் தேதி புவனகிரி மேற்கு ஒன்றியத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி, 17-ஆம் தேதி சிதம்பரம் நகரில் கொள்கை பரப்பு துணைச் செயலர் நெல்லிக்குப்பம் புகழேந்தியும், 18-ஆம் தேதி குமராட்சி கிழக்கு ஒன்றியத்திலும், 19-ஆம் தேதி கீரப்பாளையம் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் மாநில மாணவரணி இணைச் செயலர் கோவி.செழியன், 20-ஆம் தேதி கடலூர் நகரத்தில் கொள்கை பரப்பு துணைச் செயலர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, 22-ஆம் தேதி கம்மாபுரம் தெற்கு ஒன்றியத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதியும், 28-ஆம் தேதி காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், 29-ஆம் தேதி குமராட்சி மேற்கு ஒன்றியத்தில் இலக்கிய அணி துணைச் செயலர் ஈரோடு இறைவன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பேசுகின்றனர்.
 இந்தக் கூட்டங்களில் அந்தந்தப் பகுதி ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்பதோடு, நலத் திட்ட உதவிகளும் வழங்கி விழாவைக் கொண்டாடவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →