கடலூர்

பைக்கில் மணல் கடத்திய 2 பேர் கைது

DIN

நெல்லிக்குப்பம் அருகே பைக்கில் மணல் கடத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பத்தை அடுத்த வான்பாக்கம் பெண்ணை ஆற்றுத் தெருவைச் சேர்ந்தவர்கள் சுந்தரமூர்த்தி மகன்கள் கோகுல் (25), ராஜதுரை (20). 
இருவரும் தனித்தனி பைக்கில் தலா 2 மூட்டை மணலை ஆற்றிலிருந்து உரிய அனுமதி இல்லாமல் எடுத்து வந்தனராம். 
வான்பாக்கம் ஆர்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நெல்லிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணபதி இதுதொடர்பாக இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.  பின்னர், 2 மோட்டார் 
சைக்கிளையும் பறிமுதல் செய்ததுடன், வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT