கடலூர்

எஸ்.பி. கண்ணெதிரே லஞ்சம்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

DIN

கடலூரில் எஸ்.பி. கண்ணெதிரே லஞ்சம் வாங்கியதாக 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
 கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கடந்த 10- ஆம் தேதி தனது காரில் வேப்பூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, வேப்பூரில் அவரது காருக்கு முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த காவலர்கள் மறித்து லஞ்சம் பெற்றனராம். இதையடுத்து, லஞ்சம் வாங்கியதாக ஆவினங்குடி காவல் நிலைய சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிறுப்பாக்கம் காவலர் நந்தகுமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
 இந்த நிலையில், துறை ரீதியான விசாரணைக்குப் பின்னர் அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT