வேளாண் கூட்டுறவு சங்க கடனுதவி வழங்கும் விழா
காட்டுமன்னார்கோவில் ஸ்ரீஞானவிநாயகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவில் ஸ்ரீஞானவிநாயகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில், வங்கி உதவி செயலர் அருள் வரவேற்றார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தோத்தாத்திரி தலைமை வகித்தார். வங்கிச் செயலர் தர்மராவ் முன்னிலை வகித்தார்.
விழாவில் காட்டுமன்னார்கோயில் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் நாக.முருகுமாறன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 100 பயனாளிகளுக்கு ரூ.2,46,000 மதிப்பிலான கடனுதவி, பொருள்களை வழங்கிப் பேசினார்.
பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.ஜி.ஆர்.தாசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அறிவுக்கரசன், பாலசுப்பிரமணியன், பாலசந்தர், ஜான்போஸ்கோ, சுவாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். துணைத் தலைவர் தனவள்ளி நன்றி கூறினார்.