முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் நடைபாதை கடைகள் அகற்றம்

சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:36 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
 சிதம்பரம் நகரில் முக்கிய வீதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
 இதையடுத்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் தேரோடும் நான்கு வீதிகளான மேலவீதி, வடக்குரத வீதி, தெற்குரத வீதி, கீழரத வீதி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நடைபாதைக் கடைகளை அகற்றினர். இதையடுத்து வீதிகள் விசாலமாகக் காணப்பட்டன.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.