நடராஜர் கோயிலில் இன்று சத்சங்கம் நிகழ்ச்சி தொடக்கம்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், கேரள மாநிலம், பாலக்காடு கேசரிபுரம் சிவா சமேக்ஷா சமிதி சார்பில் வேதபாராயண சத்சங்கம் நிகழ்ச்சி திங்கள்கிழமை (செப்.3) தொடங்குகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், கேரள மாநிலம், பாலக்காடு கேசரிபுரம் சிவா சமேக்ஷா சமிதி சார்பில் வேதபாராயண சத்சங்கம் நிகழ்ச்சி திங்கள்கிழமை (செப்.3) தொடங்குகிறது.
இதுகுறித்து சிவா சமேக்ஷா சமிதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.வாசு சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்சங்கம் நிகழ்ச்சி வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரமண சரண தீர்த்தர் நுச்சூர் வெங்கட்ராமன் பங்கேற்று பிரபாஷனம் மற்றும் சிவானுபாவம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார். தினமும் காலை 6.30 மணி முதல் 7 மணி வரை வேதபாராயணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ரங்கசாமி தீட்சிதர், ஸ்ரீதர் சர்மா, திருவையாறு ரமணா சர்மா ஆகியோர் பங்கேற்று சத்சங்கம் நிகழ்ச்சியை நடத்துகின்றனர் என்றார் அவர்.