முகப்பு
கடலூர்

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுக்கூட்டம்

கடலூர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:38 AM
பகிர்:

கடலூர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு நகர் குழு உறுப்பினர் பி.ஏழுமலை தலைமை வகித்தார். நகர் குழு உறுப்பினர் டி.செந்தில்குமார் வரவேற்றார். புதுவை பிரதேச செயற்குழு உறுப்பினர் டி.முருகன் சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், நகரச் செயலர் ஆர்.அமர்நாத், ஒன்றியச் செயலர் ஜே.ராஜேஷ்கண்ணா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.பாஸ்கரன், எஸ்.தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். புதுக்கோட்டை பூபாலம் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் நகரம் சார்பில் கட்சிக்கு வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. வார்டு செயலர் கே.உதயகுமார் நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.