கடலூர்

கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்  சங்கப் போராட்ட ஆயத்தக் கூட்டம்

DIN

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் போராட்ட ஆயத்தக் கூட்டம்  கடலூரில் அண்மையில் நடைபெற்றது. 
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்கும் முறையை வணிக வங்கிகளுக்கு இணையாக எளிமைபடுத்திட வேண்டும் உள்ளிட்ட 16  அம்சக் கோரிக்கைகளை  நிறைவேற்றி தருமாறு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.  
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற  17-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் கடன் வழங்கும் பணிகளை முற்றிலும் புறக்கணிக்கவும் சங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம் கடலூர் நகர அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சங்கத்தின் கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் செயலர்கள், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு, கடலூர் மாவட்ட தலைவர் ஆர்.சாம்பசிவம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர்  முத்துப்பாண்டியன், மாநில துணைத் தலைவர்கள் துரைக்கண்ணு, சங்கரன், மாநில இணைச் செயலர்கள் காமராஜ்பாண்டியன், செந்தில்குமார், மாநில பொருளாளர் சேகர், திருவண்ணாமலை  மாவட்ட பொறுப்பாளர்கள் ஆனந்தன், சேகர், ஏழுமலை, சாமியார், நாகராஜன், சேகர், கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சாம்பசிவம், சேகர், திருநாவுக்கரசு, லட்சமிநாராயணி, சீனுவாசன்,  செல்வம், பொன் சாந்தகுமார், சக்திவேல், மாரிமுத்து ஆகியோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT