கடலூர்

மணியாக்காரன் குட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

பள்ளிப்படை  மணியாக்காரன் குட்டையில் தனியார் ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
சிதம்பரம் அருகே பள்ளிபடை பகுதியில் மணியாக்காரன் குட்டை உள்ளது. இந்த குட்டையானது தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. குட்டை பகுதியில் விநாயகர் கோயில் கட்டப்பட்டு, தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், குட்டை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி வட்டார வளர்ச்சி அதிகாரி தங்கம் தலைமையில், வட்டாட்சியர் தழிழ்செல்வன், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் குமார் மற்றும் போலீஸார் முன்னிலையில் விநாயகர் கோயில், தடுப்பு சுவர்கள் பொக்லைன் முலம் இடித்து அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாளை.யில் கால்வாய் கரைகள் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

தம்பதி படுகொலை: வடமாநில இளைஞர் கைது

குமரியில் வெயிலில் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான்: ஹெச்.ராஜா

SCROLL FOR NEXT