கடலூர்

சமுதாய வளைகாப்பு விழா

தினமணி

தமிழக அரசின் சமூக நலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பழனி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புசெல்வன், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஆகியோர் பங்கேற்று, கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சார்பில் சீர்வரிசைப் பொருள்களை வழங்கினர். விழாவில் பரங்கிப்பேட்டை, குமராட்சி, புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.
 ஏற்பாடுகளை பரங்கிப்பேட்டை வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அனிதா, புவனகிரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தனபாக்கியம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT