கடலூர்

ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

DIN


அடையாளம் தெரியாத இளைஞர் ரயிலில் அடிபட்டு சனிக்கிழமை உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகே திருவதிகையில் ஆயில் மின் பேருந்து நிறுத்தம் அருகே விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாகச் செல்லும் இருப்புப் பாதையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. சனிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவர்கள், இருப்புப் பாதையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. சனிக்கிழமை அதிகாலையில் அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிப்பட்டு இவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடலூர் முதுநகர் ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT