நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு நெய்வேலி, புதுக்குப்பம் சந்திப்பில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு, என்எல்சி நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், சுரங்கத் துறை இயக்குநர் பிரபாகர் சவுக்கி, மின் துறை இயக்குநர் ஷாஜி ஜான் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினப் பணியாளர்கள் நலக் கூட்டமைப்பு பொறுப்பாளர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.