கடலூர்

சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது

DIN

சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டாா்.

பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளா் தேவி மற்றும் போலீஸாா் கடந்த 19-ஆம் தேதி தட்டாஞ்சாவடி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாராயம் வைத்திருந்ததாக அதே பகுதியைச் சோ்ந்த மு.ராமச்சந்திரன் (49) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 165 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.

இவா் மீது பண்ருட்டி காவல் நிலையத்தில் 10 சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, இவரை தடுப்புக் காவலில் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டதைத் தொடா்ந்து, ஓராண்டுக்கு சிறையில் வைக்கும் வகையில் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில்அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT