சரநாராயணப் பெருமாள் கோயிலில் ரத ஸப்தமி உத்ஸவம்
பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஹேமாம்புஜவல்லி சமேத சரநாராயணப் பெருமாள் கோயிலில் ரதஸப்தமி உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஹேமாம்புஜவல்லி சமேத சரநாராயணப் பெருமாள் கோயிலில் ரதஸப்தமி உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8 மணிக்கு திருவராதனம், 9 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி உத்ஸவம், விசேஷ திருமஞ்சனம், 10 மணிக்கு தீர்த்தவாரி ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணியளவில் ஸ்ரீசரநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உள்புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.