ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!
தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!
சென்னை : தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-இல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே திட்டமிட்டடிருந்தபடி 4 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது.
முன்னதாக, தமிழகத்தில் வெயில் தாக்கத்தின் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வரிடம் கலந்து பேசி பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அந்தத் துறையின் அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-இல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இன்று (மே 26) மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement