கடலூர்

ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் சாவு

DIN

கடலூரில் ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
கடலூர் துறைமுகம் ஆற்றங்கரை வீதியைச் சேர்ந்த சக்கரபாணி மகன் கோகுலகிருஷ்ணன் (36). இவர், செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியிலுள்ள உப்பனாற்றுக்குச் சென்றார். அங்கு, இயற்கை உபாதையை கழித்தபோது ஆற்றில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. 
இதில், கோகுலகிருஷ்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் சடலத்தை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 
இந்த நிலையில், அன்று மாலை கோகுல
கிருஷ்ணனின் சடலம் கரை ஒதுங்கியது. 
இதுகுறித்து சக்கரபாணி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT