கடலூர்

பள்ளியில் சாதிய வன்கொடுமை: சார்-ஆட்சியரகத்தில் புகார்

அரசுப் பள்ளியில் சாதிய வன்கொடுமை தொடர்பாக சார்-ஆட்சியரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

DIN

அரசுப் பள்ளியில் சாதிய வன்கொடுமை தொடர்பாக சார்-ஆட்சியரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
 கடலூர் வட்டம், வெள்ளக்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர் வியாழக்கிழமை கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
 வெள்ளக்கரை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு அப்பாற்பட்டவர்கள் பள்ளியில் சாதிய ரீதியிலான தூண்டுதலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது. 
 எனவே, இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மோதல்களை களைவதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கமிட்டியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT