கடலூர்

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் வழிபாடு செய்ததைக் கண்டித்து, பண்ருட்டியில் இந்து முன்னணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ராஜன், சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர் தனில்குமார், சமுதாய நல்லிணக்கப் பேரவை மாநில அமைப்பாளர் குரு.சுப்ரமணியன், அய்யப்ப பக்தர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் நாராயணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
 நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பாஜக நகரத் தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, கேரளத்தில் ஆளும் ஆரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT