கடலூர்

குற்றத் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், குற்றத் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் என்.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நெய்வேலி நகரியம், தெர்மல், மந்தாரக்குப்பம், ஊ.மங்கலம், வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் டிஎஸ்பி சரவணன் பேசுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT