கடலூர்

பிப்.19-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

DIN

கடலூர் மாவட்டத்தில் அரசுப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்க  வளாகத்தில் வருகிற பிப்.19-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.  
கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
எனவே, கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை இரண்டு பிரதிகளில், 
"ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு' என குறிப்பிட்டு 31.01.2019-ஆம் தேதிக்குள், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோஅனுப்பி வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT