கடலூர்

மணப்பெண்ணிடம் நகை திருட்டு 

DIN

மணப்பெண்ணிடம் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
 கடலூர் அருகே உள்ள செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு (60). இவரது மகளின் திருமண நிகழ்ச்சி கடலூரில் அண்மையில் நடைபெற்றது. அப்போது, ஒப்பனை முடிந்த பின்னர் மணமகள் கழற்றி வைத்திருந்த ஆறேகால் பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்து, ராமு அளித்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக ஒப்பனை பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT