கடலூர்

பாரதிதாசன் பல்கலை. சார்பில் மாணவர்கள் சேர்க்கை விழா 

DIN

பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் 2019-20-ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விழா வடலூர், ஆபத்தாரணபுரம் திருபூரநேனி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு வள்ளலார் கல்வி அறக்கட்டளைத் தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளருமான சு.ராஜ்குமார் தலைமை வகித்தார்.
 சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் செம்மொழி பேரவைத் தலைவர் ரா.சஞ்சீவிராயர் பங்கேற்று பேசினார். மேலும், மாணவர் சேர்க்கையை தொடக்கிவைத்து கல்வி ஆலோசனைகளை வழங்கினார்.
 நிகழ்வில் வேளாண் இயக்குநர் (ஓய்வு) பி.தனசேகரன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பி.ச.துரைமணிராஜன், எம்பிசி பட்டதாரிகள் நலச் சங்கத் தலைவர் டி.அசோக்குமார், மாவட்டச் செயலர் சிவக்குமார் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.
 நிகழ்வில், திருபூரநேனி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மின்சாதனப் பொருள்களை வள்ளலார் கல்வி அறக்கட்டளைத் தலைவர் சு.ராஜ்குமார் அன்பளிப்பாக வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT