கடலூர்

தீ விபத்தில் குடிசை சேதம்

DIN

குறிஞ்சிப்பாடியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது.
 குறிஞ்சிப்பாடி, பழைய காவல் நிலையம் அருகே உள்ள தச்சர் தெருவில் வசிப்பவர் இந்திராணி (50). இவரது குடிசை வீடு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் கா.ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT