சாலைப் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலூர் தலைமை தபால் நிலையம் சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள ஒளிரும் (டிஜிட்டல்) பலகை புதன்கிழமை இரவு இயக்கி வைக்கப்பட்டது.
மாவட்ட காவல் துறை முயற்சியால் கல்யாண் மருத்துவமனை சார்பில் இந்தப் பதாகை அமைக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை தொடர்ந்து காட்சிப்படுத்தும் இந்தப் பதாகையை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்யாண் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை மருத்துவர் கல்யாணராமன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டைராஜ், போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் ஞானவேல், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் விஸ்வநாதன், இளையராஜா மற்றும் கடலூர் சிறகுகள் அமைப்பினர் கலந்து கொண்டனர்.