கடலூர்

சாலைப் பாதுகாப்பு  ஒளிரும் விழிப்புணர்வு பலகை திறப்பு

DIN

சாலைப் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலூர் தலைமை தபால் நிலையம் சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள ஒளிரும் (டிஜிட்டல்) பலகை புதன்கிழமை இரவு இயக்கி வைக்கப்பட்டது.
 மாவட்ட  காவல் துறை  முயற்சியால் கல்யாண் மருத்துவமனை சார்பில் இந்தப் பதாகை அமைக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை தொடர்ந்து காட்சிப்படுத்தும் இந்தப் பதாகையை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் இயக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் கல்யாண் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை மருத்துவர் கல்யாணராமன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டைராஜ், போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் ஞானவேல், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் விஸ்வநாதன், இளையராஜா மற்றும் கடலூர் சிறகுகள் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT