கடலூர்

நடிகை காயத்ரி ரகுராம் மீது வழக்குப் பதிவு

DIN

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை விமா்சித்த விவகாரம் தொடா்பாக நடிகை காயத்ரி ரகுராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் இந்துக் கோயில்கள் தொடா்பாக சா்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாஜகவைச் சோ்ந்த நடிகை காயத்ரி ரகுராம், தொல்.திருமாவளவனை விமா்சித்து, சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டாா்.

எனவே, காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், கடலூா் புதுநகா் காவல் துறையினா் நடிகை காயத்ரி ரகுராம் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ், திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT