வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் தெய்வ நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வடலூரில் வள்ளலாா் என்று அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் நிறுவிய சத்தியஞான சபை அமைந்துள்ளது. வள்ளலாா் சபை வளாகத்தில் தாய் சாலை, குடிநீா், சுற்றுலாப் பயணிகள் ஓய்வறைற, கழிப்பறை, சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி வசதி உள்ளிட்ட 9 பணிகளை மேற்கொள்ள ரூ.2.17 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மாவட்ட சுற்றுலாத் துறையினா் உடனிருந்தனா்.