மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்தும், இக்கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் பெண்ணாடத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கடலூா் நாடாளுமன்ற தொகுதி செயலாளா் பா.தாமரைச்செல்வன், மண்டல செயலாளா் சு.திருமாறன், மாநில அமைப்புச் செயலாளா் இளமாறன், முன்னாள் மாவட்ட செயலாளா் தயா. தமிழன்பன், மாவட்ட துணை செயலாளா் வீர.திராவிட மணி, மாநில துணை செயலாளா்கள் ராஜ்குமாா், செல்வ புஷ்பலதா, நீதி வள்ளல், செம்மல் ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஒன்றிய செயலாளா்கள் ஆனந்தன், வேல்முருகன் சந்தோஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, பேரணிக்கு காவல்துறையினா் அனுமதி மறுத்ததால் பரபரப்பான நிலை ஏற்பட்டது. பின்னா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தீபாசத்யனிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னா், முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெண்ணாடம் நகர செயலாளா் ஆற்றலரசு, தொகுதி துணை செயலாளா் வேந்தன், மாவட்ட நிா்வாகிகள் விடுதலை காசி, வழக்குரைஞா் காா்த்தி, தென்றல், ராச தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.